ஞாயிறு, 30 டிசம்பர், 2012

வணக்கம்

வல்வை அலையோசை      

வணக்கம்,
ஒரு பெரிய சஞ்சிகை ஆசிரியரைப் போல,அல்லது பத்திரிகை ஆசிரியரைப் போல, அல்லது ஏதோ ஒரு பெரிய கூட்டம் எனது கதையை வாசிப்பது போல ஆசிரியர் பக்கத்தில் அல்லது ஆசிரியர் தலையங்கத்தில் உங்கள் எல்லோருடனும் அளவளாவுவதில் ஒரு சந்தோஷம். வைரமுத்து எழுதிய “காதலித்துப்பார்” எனும் கவிதையின் ஒரு பகுதி ஞாபகத்துக்கு வருகிறது.
“காக்கை கூட உன்னைக் கவனிக்காது. ஆனால் இந்த உலகமே உன்னைக் கவனிப்பதாய் உணர்வாய்.”
ஆனாலும் எழுதுவதற்குத் தேவையான எண்ணத்தைப் பெறுவதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணி.
“வல்வை அலையோசை”யின் மூன்றாவது இதழ் வெளிவந்து சரியாக நான்கு மாதங்களாகின்றன. தனியே blog business என்றாள் இந்த இடைவெளி வந்திருக்காது. Blog business உடன் block business உம் ஆரம்பித்தது, அதன் பின் ஏற்றுக் கொண்ட புது வேலை, அதன் மூலம் கிடைத்த பொறுப்புக்கள், அதோடு சேர்ந்து வந்த கற்பித்தல் தொழில் என்பன இந்த இடைவெளிக்குக் காரணமாகி விட்டன.
நண்பனொருவன் எவ்வளவு காலத்துக்கு ஒரு தடவை “வல்வை அலையோசை” வெளியாகவிருக்கிறது என்ற கேள்விக்கு நேரம் அனுமதித்தால் ஒரு மாதத்துக்கு ஒரு தடவை என்று கூறியிருந்தேன். அது சாத்தியமில்லை என்று புரிந்து விட்டது. ஆனால் இனியும் கூட எவ்வளவு காலத்துக்கு ஒரு தடவை என்று திட்டமிட்டுக் கூற முடியாதிருக்கிறது. இதை வெளி விடும்போது வாசிக்கும் ஒன்றிரண்டு பேர்களுக்கும் எப்படியாவது அறிவித்து விடுகிறேனே. இனி தொடர்ந்து வாசியுங்கள்.
1.       முன்னாள் போராளிகளிடம் சில கேள்விகள்
2.       தொலைந்த நகரம்-அட்லாண்டிஸ்
3.       தொண்டைமானாறு அச்சுவேலி பாதையின் அவலம்
4.       இப்போது சொர்க்கம்-பாலஸ்தீனத் திரைப்படம்
5.       வல்வையின் வரலாற்று ஆவணக் காப்பகம்
6.       சில விசேட சொற்றொடர்கள்-தொடர்ச்சி
7.       சுனாமி 2004-நான்காவது இதழ் தொடர்ச்சி
8.       பஸ்சிமோத்தாசனம்
9.       ஊரணி தீர்த்தம்
10. வல்வை மக்களை ஒன்றிணைத்து உருவாகவிருக்கும் ஒரு புதிய அமைப்புக்கான அபிப்பிராயம் அறிந்த கூட்டம்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக