ஞாயிறு, 30 டிசம்பர், 2012

தொண்டைமானாறு அச்சுவேலி பாதையின் அவலம்

   தொண்டைமானாறு அச்சுவேலி பாதையின் அவலம்

தொண்டைமானாறு, அச்சுவேலி பாதை திறந்து எத்தனையோ மாசம்.
ஆனால் பாதையோ ரொம்ப மோசம்.
அதில் போகும் வாகனங்கள் எல்லாம் நாசம்.
வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு மக்களிடம் இல்லையா பாசம்?
1990 களின் ஆரம்பப் பகுதியில் தொண்டைமானாறுப் பாலம் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வீதியூடான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டிருந்தது. ஆனாலும் 2007 ஆம் ஆண்டளவில் இராணுவத்தினர் பாலத்தைத் தற்காலிகமாகத் திருத்தியமைத்து பலாலியிலிருந்து தமது விநியோகத்திற்கான பாதையாகப் பாவித்து வந்தனர்.
10.08.2010 அன்று ஆரம்பமாகவிருந்த சந்நிதி வருடாந்த ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு 07.08.2010 அன்று இப்பாலம் மக்களின் பாவனைக்காகத் திறந்து விடப்பட்டது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அப்போதைய யாழ் கட்டளையிடும் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவுடன் பேச்சு நடத்தியதன் பலனாக இப்பாதை திறக்கப்பட்டதாகப் பத்திரிகையில் செய்திகள் வெளியாகியிருந்தன.
வலிகாமம் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த பக்தர்களுக்கு மட்டுமல்லாமல் யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதிகளை நோக்கிப் பயணிக்கும் / பகுதிகளிலிருந்து வரும் தொண்டைமானாறு கெருடாவில் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதமாகத் தான் இருக்கும் என்று கருதப்பட்டாலும் வீதியின் நிலையைப் பார்க்கும் பொது இது ஒரு சாபமோ என்று எண்ணத்தோன்றுகிறது.
அச்சுவேலி, பத்தைமேனிச்சந்தி, கதிரிப்பாய்ச்சந்தி என்று அங்கிருந்து வரும் போது “நல்லாத்தானே போய்கிட்டிருக்கு” என்று தோன்றினாலும் அதன் பின் தம்பாலைச் சந்தி, காத்தாடிச்சந்தி என்று தொண்டைமானாற்றுப் பாலத்தில் ஏறும் வரை “ஆத்தாடி, ரொம்ப terror ல்ல இருக்கு” என்று தான் எண்ணத் தோன்றுகிறது.
இந்தக் கட்டுரையின் ஒரு பிரதி பிரதேச செயலருக்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் அனுப்பி வைக்கப்படவிருக்கிறது. நான் எனது மட்டத்தில் முயற்சித்தது போல் அவர்களும் தங்கள் தங்கள் மட்டத்தில் முயற்சிப்பார்கள் என்று நம்புகிறேன்.         
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக